என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப பிரச்சினை காரணமாக புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 July 2018 4:03 PM GMT (Updated: 18 July 2018 4:03 PM GMT)
குடும்ப பிரச்சினை காரணமாக புதுப்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 3-ம் வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அப்துல்ஹாதி (வயது 33). இவருக்கும் சிவபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த சேக்முகமது மகள் மும்தாஜ் (21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மும்தாஜுக்கும், அப்துல்ஹாதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மும்தாஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கணேஷ்நகர் போலீசார் மும்தாஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மும்தாஜின் தந்தை சேக்முகமது கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்தாஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் மும்தாஜ் தற்கொலை செய்து கொண்டதால், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரும் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் 3-ம் வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அப்துல்ஹாதி (வயது 33). இவருக்கும் சிவபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்த சேக்முகமது மகள் மும்தாஜ் (21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மும்தாஜுக்கும், அப்துல்ஹாதிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மும்தாஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கணேஷ்நகர் போலீசார் மும்தாஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மும்தாஜின் தந்தை சேக்முகமது கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்தாஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் மும்தாஜ் தற்கொலை செய்து கொண்டதால், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரும் (பொறுப்பு) விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X