என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்டக்டர் இல்லா பஸ்கள் இயக்குவதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
Byமாலை மலர்18 July 2018 11:19 AM GMT (Updated: 18 July 2018 11:19 AM GMT)
கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள பவர் ஹவுஸ் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதத்திற்கு கோவை மண்டல தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வில்லியம், அமைப்பு செயலாளர் மோகன் ராஜ், பொருளாளர் நடராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணவிரதத்தை மாநில தலைவர் ராகவேந்திரன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி கோவை தலைவர் குப்புசாமி, மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், இணை பொது செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
கண்டக்டர் இல்லாத பஸ் இயக்கத்தை கைவிட வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த டிரைவர்கள், கண்டக்டர்களை முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
போக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கி, போதுமான தொழில் நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தை மாநில பொது செயலாளர் பத்மநாபன் முடித்து வைக்கிறார். முடிவில் பெரிய சாமி நன்றி கூறுகிறார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் கோவை டாடாபாத்தில் உள்ள பவர் ஹவுஸ் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரதத்திற்கு கோவை மண்டல தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வில்லியம், அமைப்பு செயலாளர் மோகன் ராஜ், பொருளாளர் நடராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணவிரதத்தை மாநில தலைவர் ராகவேந்திரன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி கோவை தலைவர் குப்புசாமி, மாநில அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், இணை பொது செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பேசினார்கள்.
கண்டக்டர் இல்லாத பஸ் இயக்கத்தை கைவிட வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த டிரைவர்கள், கண்டக்டர்களை முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
போக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்கி, போதுமான தொழில் நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தை மாநில பொது செயலாளர் பத்மநாபன் முடித்து வைக்கிறார். முடிவில் பெரிய சாமி நன்றி கூறுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X