search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மேலூர் அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

    மேலூர் அருகே 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இதே ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியும் அதே நூற்பாலையில் வேலை செய்து வந்தாள்.

    இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று விட்டனர். பின்பு மணிகண்டன், சிறுமியை தனது வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    Next Story
    ×