என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரசாயனம் தடவிய மீன்கள் தமிழகத்திற்குள் வரவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
Byமாலை மலர்12 July 2018 8:48 AM GMT (Updated: 12 July 2018 8:48 AM GMT)
வெளி மாநிலங்களில் இருந்து ரசாயனம் தடவிய மீன்கள் தமிழகத்திற்குள் வரவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:
ரசாயனம் தடவிய மீன் விற்பனைக்கு வருகிறதா? அதை தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு வரும் மீன்களில் ரசாயனம் உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை அல்ல.
ஏனென்றால் வெளிமாநிலங்களில் இருந்து புழல் காவாங்கரை, வானகரம் மீன்மார்க்கெட்டுக்கு வரும் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை. மீன்களில் ரசாயனம் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
எனவே தேவையில்லாமல் வீண் வதந்தி பரப்பப்படுகிறது. யாரும் பீதி அடைய தேவையில்லை. அச்சப்பட வேண்டாம்.
தமிழகத்தை பொறுத்த வரை கடலில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாகி விடுகிறது. மீன்கள் கெடாமல் இருப்பதற்காக கெமிக்கல் தடவ வேண்டிய அவசியம் இல்லை.
மீன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதி கொண்ட இன்சுலேட்டர் வேன்கள் உள்ளது. ஐஸ் பெட்டிகளும் உள்ளன. இதில் தரமான ‘ஐஸ்’ உபயோகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மீன்பிடி துறைமுகங்களிலும் அதிகாரிகள் மீன்களின் தரத்தை சோதனையிடுகின்றனர். இதில் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானதாகும். எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் மீன்களை வாங்கி சாப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரசாயனம் தடவிய மீன் விற்பனைக்கு வருகிறதா? அதை தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு வரும் மீன்களில் ரசாயனம் உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை அல்ல.
ஏனென்றால் வெளிமாநிலங்களில் இருந்து புழல் காவாங்கரை, வானகரம் மீன்மார்க்கெட்டுக்கு வரும் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை. மீன்களில் ரசாயனம் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
எனவே தேவையில்லாமல் வீண் வதந்தி பரப்பப்படுகிறது. யாரும் பீதி அடைய தேவையில்லை. அச்சப்பட வேண்டாம்.
தமிழகத்தை பொறுத்த வரை கடலில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாகி விடுகிறது. மீன்கள் கெடாமல் இருப்பதற்காக கெமிக்கல் தடவ வேண்டிய அவசியம் இல்லை.
மீன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதி கொண்ட இன்சுலேட்டர் வேன்கள் உள்ளது. ஐஸ் பெட்டிகளும் உள்ளன. இதில் தரமான ‘ஐஸ்’ உபயோகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மீன்பிடி துறைமுகங்களிலும் அதிகாரிகள் மீன்களின் தரத்தை சோதனையிடுகின்றனர். இதில் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானதாகும். எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் மீன்களை வாங்கி சாப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X