என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Byமாலை மலர்19 Jun 2018 4:37 PM GMT (Updated: 19 Jun 2018 4:37 PM GMT)
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அன்னவாசல்:
அன்னவாசல் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்தவர் சோலையன். இவரது மகன் பார்த்தசாரதி (வயது27). இவர் மலேசியாவில் இருந்து விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு காலாடிப்பட்டி சத்திரத்திற்கு பார்த்தசாரதி சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே செங்கப்பட்டி பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பார்த்தசாரதி படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அன்னவாசல் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்தவர் சோலையன். இவரது மகன் பார்த்தசாரதி (வயது27). இவர் மலேசியாவில் இருந்து விடுமுறைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு காலாடிப்பட்டி சத்திரத்திற்கு பார்த்தசாரதி சென்று கொண்டிருந்தார். அன்னவாசல் அருகே செங்கப்பட்டி பிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பார்த்தசாரதி படுகாயமடைந்தார்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X