search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி
    X

    மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது- கனிமொழி

    பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகள் விலகி வருவதாகவும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருவதாகவும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இத்தனை ஆண்டுகளாக சிறையில் இருந்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளுக்கு விடுதலை தராதது வருந்தத்தக்கது. சிறையில் இருந்த எத்தனையோ பேருக்கு விடுதலை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

    இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான நிலைபாட்டைத்தான் எடுத்து உள்ளது. பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பல கட்சிகளும் விலகி வரக்கூடிய நிலையும் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலுவாகி வருகிறது.



    தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக யாரும் இல்லை. அந்தந்த பகுதிகளில் திட்டங்கள் கொண்டு வரப்படும் போது மக்களிடம் பேசி, அவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்து கொள்ளாமல் தாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று கூறுபவர்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று கூறுவதற்கு அருகதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #DMK
    Next Story
    ×