search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை தடுக்க அரசிடம் வலியுறுத்துவோம்: திருநாவுக்கரசர் பேட்டி
    X

    கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை தடுக்க அரசிடம் வலியுறுத்துவோம்: திருநாவுக்கரசர் பேட்டி

    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென அரசுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினரை சந்தித்தார். 

    அப்போது, திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் செய்து வரும் போராட்டங்களை கேட்டறிந்த அவர், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து, 

    கொள்ளிடம் நீராதாரக்குழு மற்றும் காங்கிரஸ் சார்பில் திருமானூர் பஸ் நிலையம் அருகே திருநாவுகரசருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×