search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஆசிரியர் பொன்ராஜதுரையிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி
    X
    கைதான ஆசிரியர் பொன்ராஜதுரையிடம் போலீசார் விசாரணை நடத்திய காட்சி

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஜெயிலில் அடைப்பு

    குளச்சல் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள இலப்பவிளை அரசு தொடக்கப்பள்ளியில் தெற்கு புத்தளத்தைச் சேர்ந்த பொன்ராஜதுரை (49) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பொன் ராஜதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி, பெற்றோரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நேரில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி ஆசிரியரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

    கல்வி அதிகாரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டும், ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த குளச்சல் உதவி தொடக்க கல்வி அதிகாரி சந்திரமதி, குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) வேணுகோபால் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் பெற்றோரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யும் படி அறிவுறுத்தினர். அதன்படி பெற்றோரும் குளச்சல் போலீஸ் நிலையம் சென்று தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து பொன் ராஜதுரை மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அப்போது பொன் ராஜதுரை திடீரென மயங்கி விழுந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் பொன் ராஜதுரை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் நாகர்கோவில் ஜெயிலில் பொன்ராஜதுரை அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் நேற்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×