என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 24 பேர் காயம்
Byமாலை மலர்21 May 2018 4:41 PM GMT (Updated: 21 May 2018 4:41 PM GMT)
அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு தகுதியான 281 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 257 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களை 2 குழுக்களாக பிரித்து மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.
இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசி பிடிபடாமல் பந்தய எல்லைக்கோட்டை சென்றடைந்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் நீண்டநேரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்களான தொண்டமாந்துறையை சேர்ந்த ஆண்டனிசாமி (வயது 50), பூலாம்பாடி பாஸ்கர்(21), லால்குடி சதீஷ் (30), ஜெஸ்டின்ராஜ் (27), தம்மம்பட்டி கருப்பண்ணன்(53) உள்பட 12 பேரும், பார்வையாளர்களான அன்னமங்கலம் ராபின் (23), அரசலூர் அரவிந்த்(19) உள்பட 12 பேர் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசு, அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செல்வராஜ், தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு தகுதியான 281 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 257 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களை 2 குழுக்களாக பிரித்து மாடுகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.
இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களை கொம்பால் குத்தி தூக்கி வீசி பிடிபடாமல் பந்தய எல்லைக்கோட்டை சென்றடைந்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் நீண்டநேரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரர்களான தொண்டமாந்துறையை சேர்ந்த ஆண்டனிசாமி (வயது 50), பூலாம்பாடி பாஸ்கர்(21), லால்குடி சதீஷ் (30), ஜெஸ்டின்ராஜ் (27), தம்மம்பட்டி கருப்பண்ணன்(53) உள்பட 12 பேரும், பார்வையாளர்களான அன்னமங்கலம் ராபின் (23), அரசலூர் அரவிந்த்(19) உள்பட 12 பேர் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் நாற்காலி, சைக்கிள், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளுக்கும் பரிசு, அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் செல்வராஜ், தாசில்தார் பாரதிவளவன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X