என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
பு.புளியம்பட்டி, மே.21-
புஞ்சை புளியம்பட்டி அருகே பவானிசாகர் ரோட்டில் தாசம்பாளையம் காலனி உள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ளன.
இந்த பகுதி மக்களுக்கு பவானிசாகர்-தொட்டம்பா ளையம் கூட்டு குடிநீர் திட் டத்தின் கீழ் குடிநீர் வழங்கப் படுகிறது. ஆனால் சீரான குடிநீர் விநியோகம் இல்லா மல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்களாம்.
இந்த பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப் பட்டது. 6 வருடம் ஆகியும் அந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.இதனால் மக்களுக்கு சீரான விநியோகம் கிடைக்க வில்லை. இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே அந்த பகுதி மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி- பவா னிசாகர் ரோட்டில் தாசம் பாளையம் காலனியில் குவிந்தனர்.
காலி குடங்களுடன் வந் திருந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புஞ்சைபுளிம்பட்டியில் இருந்து பவானிசாகருக்கு செல்லும் மெயின் ரோட்டில் இந்த சாலைமறியல் போராட் டம் நடந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரி யவந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறி யல் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்யும் நட வடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி மாற்று வழி யில் வாகனங்கள் இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்ட.து. இதற்கிடையே பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அங்கு வந் தார்.
போலீசாருடன் இணைந்து அவர் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். * * * பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்