search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puliampatti"

    புளியம்பட்டி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி இரட்டை பாலம் அருகே நேற்று நள்ளிரவு வந்த போது எதிரே ஒரு லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பக்கவாட்டில் லாரி மோதியது.

    இதில் பஸ்சின் பின் புற பக்கவாட்டு சீட்டின் ஓரம் அமர்ந்திருந்த லிங்கம்மாள் (வயது65) மற்றும் அவருடன் வந்த நாகராஜ்(45) ரங்கசாமி (40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு 3 பேரையும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே லிங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காக வந்திருந்தனர். பஸ்சில் வந்த போது விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் லாரியை சத்தியமங்கலத்தில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஏற்பட்டது. இதனால் ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பு.புளியம்பட்டி, மே.21-

    புஞ்சை புளியம்பட்டி அருகே பவானிசாகர் ரோட்டில் தாசம்பாளையம் காலனி உள்ளது. இங்கு 100 வீடுகள் உள்ளன.

    இந்த பகுதி மக்களுக்கு பவானிசாகர்-தொட்டம்பா ளையம் கூட்டு குடிநீர் திட் டத்தின் கீழ் குடிநீர் வழங்கப் படுகிறது. ஆனால் சீரான குடிநீர் விநியோகம் இல்லா மல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்களாம்.

    இந்த பகுதி மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப் பட்டது. 6 வருடம் ஆகியும் அந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.இதனால் மக்களுக்கு சீரான விநியோகம் கிடைக்க வில்லை. இது குறித்து பல முறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

    எனவே அந்த பகுதி மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி- பவா னிசாகர் ரோட்டில் தாசம் பாளையம் காலனியில் குவிந்தனர்.

    காலி குடங்களுடன் வந் திருந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு அவர்கள் கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புஞ்சைபுளிம்பட்டியில் இருந்து பவானிசாகருக்கு செல்லும் மெயின் ரோட்டில் இந்த சாலைமறியல் போராட் டம் நடந்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரோட்டில் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரி யவந்தது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறி யல் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்யும் நட வடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

    அதன்படி மாற்று வழி யில் வாகனங்கள் இயக்க நட வடிக்கை எடுக்கப்பட்ட.து. இதற்கிடையே பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் அங்கு வந் தார்.

    போலீசாருடன் இணைந்து அவர் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். * * * பொதுமக்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ×