search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் போதை ஆசாமியை அடித்து கொன்ற வாலிபர்
    X

    பழனியில் போதை ஆசாமியை அடித்து கொன்ற வாலிபர்

    பழனியில் போதை ஆசாமியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பழனி:

    பழனி அடிவாரம் குரும்ப பட்டியை சேர்ந்த ராஜா மகன் சவுந்திரபாண்டியன் (வயது35). இவர் பழனியில் பிளக்ஸ் போர்டு டிசைனிங் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பஸ் நிலையத்தில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் தேனி பஸ் எங்கே நிற்கும் என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். சவுந்திரபாண்டியன் படுகாயம் அடைந்தார். பின்னர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி சவுந்திரபாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சவுந்திரபாண்டியனின் தந்தை ராஜா பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சவுந்திரபாண்டியனை தாக்கியது தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்த கோபிநாத் (23) என தெரிய வந்தது.

    முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்த போலீசார் பின்னர் கொலை வழக்காக மாற்றி கோபிநாத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×