என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெள்ளகோவில் அருகே பிளஸ்- 2 மாணவி தீக்குளித்து தற்கொலை
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள செல்வகுமார கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் ராகவி (18). பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.
இவருக்கு 2 வயது இருந்த போது தாய் இறந்து விட்டார். தந்தை பால்ராஜூம் வேறு திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து ராகவி தனது பெரியப்பா சேகர் பாதுகாப்பில் இருந்து படித்து வந்தார்.
அவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் ஹாஸ்டலில் தங்கி படிக்க விரும்புவதாக தனது பெரியப்பா சேகரிடம் கூறினார்.அதற்கு அவர் தன்னால் அதிக செலவு செய்ய முடியாது. தேர்வு முடிவு வரட்டும் பார்த்து கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த ராகவி வீட்டின் கதவை பூட்டி கொண்டு தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்