search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டி அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த இளம்பெண் மாயம்
    X

    தொண்டி அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த இளம்பெண் மாயம்

    கோவில் திருவிழாவிற்கு வந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்பு தாளையில் மிகவும் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமான கருப்பனசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே மருதங் குடியைச்சேர்ந்த மகாலிங்கம், அவரது மனைவி மற்றும் மகள் பிரியா(24) ஆகியோர் வந்துள்ளனர்.

    சாமி கும்பிட்டு விட்டு தொண்டி தெற்கு தோப்பில் உள்ள மகாலிங்கத்தின் உறவினர் பெரியசாமி வீட்டில் மகாலிங்கம் அவரது மனைவியையும், மகள் பிரியாவையும் விட்டுவிட்டு சொந்த ஊரான மருதங்குடி சென்றார்.

    அன்று இரவு பெரியசாமி பிரியாவைக்காணவில்லை என்று மகாலிங்கத்திடன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மகாலிங்கமும் அவரது மனைவியுடன் மகள் பிரியாவைத்தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    திருவாடானை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பிரியாவை தேடி வருகிறார்.

    Next Story
    ×