என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொண்டி அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த இளம்பெண் மாயம்
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்பு தாளையில் மிகவும் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமான கருப்பனசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே மருதங் குடியைச்சேர்ந்த மகாலிங்கம், அவரது மனைவி மற்றும் மகள் பிரியா(24) ஆகியோர் வந்துள்ளனர்.
சாமி கும்பிட்டு விட்டு தொண்டி தெற்கு தோப்பில் உள்ள மகாலிங்கத்தின் உறவினர் பெரியசாமி வீட்டில் மகாலிங்கம் அவரது மனைவியையும், மகள் பிரியாவையும் விட்டுவிட்டு சொந்த ஊரான மருதங்குடி சென்றார்.
அன்று இரவு பெரியசாமி பிரியாவைக்காணவில்லை என்று மகாலிங்கத்திடன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மகாலிங்கமும் அவரது மனைவியுடன் மகள் பிரியாவைத்தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் தொண்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாடானை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பிரியாவை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்