என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்மலா தேவி வழக்கு- மதுரை கோர்ட்டில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் அடைந்தார்
Byமாலை மலர்25 April 2018 5:54 AM GMT (Updated: 25 April 2018 5:54 AM GMT)
பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். #NirmalaDevi #Karuppasamy
மதுரை:
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த புகார் தொடர்பாக கைதான பேராசிரியை நிர்மலா தேவி, தன்னை இந்த செயலுக்கு தூண்டியது காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகனை கைது செய்தனர். கருப்பசாமியை தேடி வந்தனர். அருப்புக்கோட்டையை அடுத்த திருச்சுழியில் கருப்பசாமி வசித்த வீடு, அவரது சொந்த ஊரான நாகனாகுளம் போன்ற இடங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரித்தனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்ட கருப்பசாமி, மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி மேலேந்தல் பகுதியில் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை கருப்பசாமியை பிடித்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDeviAudio #ResearchStudentSurrender
மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த புகார் தொடர்பாக கைதான பேராசிரியை நிர்மலா தேவி, தன்னை இந்த செயலுக்கு தூண்டியது காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகனை கைது செய்தனர். கருப்பசாமியை தேடி வந்தனர். அருப்புக்கோட்டையை அடுத்த திருச்சுழியில் கருப்பசாமி வசித்த வீடு, அவரது சொந்த ஊரான நாகனாகுளம் போன்ற இடங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்று விசாரித்தனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்ட கருப்பசாமி, மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி மேலேந்தல் பகுதியில் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை கருப்பசாமியை பிடித்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDeviAudio #ResearchStudentSurrender
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X