search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு நேரடி மின்சார ரெயில் - 23-ந்தேதி முதல் இயக்கம்
    X

    செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டிக்கு நேரடி மின்சார ரெயில் - 23-ந்தேதி முதல் இயக்கம்

    செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி நேரடி மின்சார ரெயில் சேவை வருகிற 23-ந்தேதி முதல் தொடங்குகிறது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். #train

    சென்னை:

    செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரெயிலில் என்றால் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இறங்கி வேறு ரெயிலில் மாற வேண்டும்.

    தற்போது செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நேரடி மின்சார ரெயிலை தென்னக ரெயில்வே இயக்குகிறது. இதன் மூலம் கடற்கரை ரெயில் நிலையத்தில் இறங்காமல் நேரடியாக கும்மிடிப்பூண்டிக்கு சென்று விடலாம்.

    செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி நேரடி மின்சார ரெயில் சேவை வருகிற 23-ந்தேதி முதல் தொடங்குகிறது. வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் மட்டுமே இந்த ரெயில் இயக்கப்படும். சனி, ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படாது.

    இந்த ரெயில் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை, தாம்பரம் வழியாக சென்று செங்கல்பட்டை காலை 9.50 மணிக்கு சென்றடையும்.

    செங்கல்பட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கும்மிப்பூண்டிக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்று அடையும்.

    கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி இடையே வார விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரை ரெயில் நிலையம் வழியாக இரவு 11.15 மணிக்கு வேளச்சேரி செல்லும்.

    வேளச்சேரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்று அடையும். #train

    Next Story
    ×