search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
    X

    பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு

    திருபுவனை அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திருபுவனை:

    திருபுவனையை அடுத்த கலிதீர்த்தாள் குப்பம் தொட்டி தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுப்பு என்ற சுகுமாறன் (வயது 27). இவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொலை- கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

    இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தாவிடம் பரிந்துரைத்தனர்.

    அதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி திருபுவனை போலீசார் சுகுமாறனை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×