search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested rowdy"

    புதுவையில் பெண் தகராறில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கை கொலை செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் செங்கேணி. இவருடைய மகன் அய்யப்பன். (வயது 25). இவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அய்யப்பன் காயம் அடைந்தார். பின்னர் நண்பர் உதவியுடன் வேலைக்கு சென்று வந்தார்.

    அதுபோல் நேற்று மாலை வேலை முடிந்ததும் தனது நண்பர் சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அய்யப்பன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் பள்ளி அருகே வந்த போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் திடீரென அய்யப்பனை வழி மறித்தது.

    பின்னர் அய்யப்பனை சரமாரியாக அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனை தடுக்க முயன்ற சங்கரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டது.

    இதில் உயிருக்கு போராடிய அய்யப்பனை உருளையன்பேட்டை போலீசார் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யப்பன் இறந்து போனார்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அய்யப்பன் கொலை செய்யப்பட்டதற்கான திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

    அய்யப்பன் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான விக்கி (25) என்பவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். காதலியை திருமணம் செய்து கொள்ளவும் அய்யப்பன் விரும்பினார். இதனை அறிந்த விக்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஏற்கனவே அய்யப்பன் மீது கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளதால் விக்கி தனது தங்கையை அய்யப்பனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கியை தாக்கி உள்ளார்.

    அப்போதே அய்யப்பனை தீர்த்துக்கட்ட விக்கி முடிவு செய்தார். ஆனால், விபத்தில் சிக்கி அய்யப்பன் வீட்டிலேயே இருந்ததால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் விக்கி இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யப்பன் தனது நண்பர் உதவியுடன் வேலை செய்து வருவதாக விக்கிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அய்யப்பனை கொல்ல விக்கி திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று மாலை அய்யப்பன் வேலை முடிந்து தனது நண்பர் சங்கருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது விக்கி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அய்யப்பனை வழிமடக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் விக்கியுடன் அவரது கூட்டாளிகளான ஜெய் என்ற ஜெயக்குமார், சோனி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் விக்கி உள்பட 4 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    வடலூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் வடலூரில் தனியார் பேக்கரி கடை எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வடலூர், அன்னை சத்யா தெருவை சேர்ந்த அருள்பாண்டி என்கிற அருள்(வயது 29) என்பவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரம்அடைந்த அருள்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவை வெட்ட முயன்றார். அப்போது அங்கே நின்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பத்மா கொடுத்த புகாரின் பேரில் அருள்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது வடலூர், மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி ஆகிய 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதையடுத்து அருள்பாண்டியின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார்(பொறுப்பு) கலெக்டர் அன்புசெல்வனுக்கு பரிந்துரை செய்தார்.

    இதை ஏற்று கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவின் பேரில் அருள்பாண்டியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    திருபுவனையில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    திருபுவனை:

    திருபுவனை பாளையத்தை சேர்ந்நதவர் பாபு. இவர் திருபுவனையில் -புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் புதுவை டி.ஆர். நகரை சேர்ந்த குமார் (வயது55) என்பவர் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று மதியம் திருபுவனை பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடியான கேடி மணி என்ற மணிகண்டன் என்பவர் குடிபோதையில் ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். பிரியாணி வாங்கி சாப்பிட்ட மணிகண்டன் அதற்கான பணத்தை கொடுக்காமல் ஓட்டலை விட்டு வெளியேற முயன்றார். அப்போது மணிகண்டனிடம் ஓட்டல் சப்ளையர் குமார் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறினார்.

    அதற்கு தன்னிடமே பணம் கேட்கிறாயா என கூறி குமாரை சரமாரியாக தாக்கினார். மேலும் குமாரையும், ஓட்டல் உரிமையாளர் பாபுவையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றார்.

    இதுகுறித்து குமார் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

    ×