என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது
பாபநாசம்:
பாபநாசம் அருகே திருக்கருகாவூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர் கவியரசன்( வயது 26). சம்பவத்தன்று அதே தெருவில் வசித்து வரும் சேகர் , தர்மராஜ், கண்ணதாசன், வினோத்குமார், மாதவன், ஆகிய 5 பேரும் சேர்ந்து கவியரசனை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைதொடர்ந்து சேகரை அதே தெருவில் வசித்து வரும் கலையரசன், கவியரசன், இருவரும் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சேகர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், ஆகியோர் வழக்கு பதிவு செய்து தர்மராஜ்(28), கண்ணதாசன்(30), வினோத் குமார்(24), மாதவன்(23), கலையரசன்(22) ஆகிய 5 பேரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்