search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது
    X

    பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது

    பாபநாசம் அருகே முன்விரோத தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருக்கருகாவூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர் கவியரசன்( வயது 26). சம்பவத்தன்று அதே தெருவில் வசித்து வரும் சேகர் , தர்மராஜ், கண்ணதாசன், வினோத்குமார், மாதவன், ஆகிய 5 பேரும் சேர்ந்து கவியரசனை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனைதொடர்ந்து சேகரை அதே தெருவில் வசித்து வரும் கலையரசன், கவியரசன், இருவரும் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் சேகர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், ஆகியோர் வழக்கு பதிவு செய்து தர்மராஜ்(28), கண்ணதாசன்(30), வினோத் குமார்(24), மாதவன்(23), கலையரசன்(22) ஆகிய 5 பேரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராஜசேகர் 5 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    Next Story
    ×