என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி கே.கே.நகரில் அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி
Byமாலை மலர்16 April 2018 11:10 AM GMT (Updated: 16 April 2018 11:10 AM GMT)
திருச்சி கே.கே.நகரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர். அய்யப்பநகர் மணிகண்டன் தெருவை சேர்ந்தவர் பத்மா (வயது 70). ஓய்வு பெற்ற தொலை தொடர்பு அலுவலர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றார்.
இந்தநிலையில் இன்று காலை பத்மா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பத்மாவை போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது வீட்டில் நகை-பணம் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனால் கொள்ளையில் ஈடுபட வந்த மர்மநபர்கள் நகை-பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது தெரிய வந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே.நகர். அய்யப்பநகர் மணிகண்டன் தெருவை சேர்ந்தவர் பத்மா (வயது 70). ஓய்வு பெற்ற தொலை தொடர்பு அலுவலர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்றார்.
இந்தநிலையில் இன்று காலை பத்மா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பத்மாவை போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது வீட்டில் நகை-பணம் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனால் கொள்ளையில் ஈடுபட வந்த மர்மநபர்கள் நகை-பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளது தெரிய வந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X