search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூரில் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பெரம்பலூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சி.எம். சின்னசாமி  தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சாதிக் பாட்ஷா, ஒன்றிய செயலாளர் அண்ணாசாமி, நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில வக்கீல் இளைஞர் அணி துணை செயலாளர் பூவை. செல்வம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர்.  தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்க மிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள் ரமேஷ்குமார், சிவக்குமார், ராஜா, ரவிச்சந்திரன், ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×