search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில் பா.ம.கவினர் பேரணி ஆர்ப்பாட்டம்
    X

    திருத்துறைப்பூண்டியில் பா.ம.கவினர் பேரணி ஆர்ப்பாட்டம்

    திருத்துறைப்பூண்டியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பா.ம.கவினர் பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் புலவர் முருகையன் தலைமை வகித்தார். தமிழக இயற்கை உழவர் இயக்கம் மாநில செயலாளர் நெல் ஜெயராமன், பா.ம.க மாநில துணைத் தலைவர் சுப்ரமணிய ஐயர், மாவட்ட செயலாளர் கி.சி.பாலு, ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் மோகன், மா.துணை செயலாளர் சுபசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கல்வி பிரியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×