search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே போலி மருத்துவர் கைது
    X

    பாபநாசம் அருகே போலி மருத்துவர் கைது

    பாபநாசம் அருகே மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருக்கருகாவூர் மெயின் ரோட்டில் மருந்து கடை உள்ளது. இந்த கடையில் பாபநாசம் குப்பமேடு பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரியவந்தது. 

    இது குறித்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் ஜெயசேகர், கும்பகோணம் சரக மருந்து ஆய்வாளர் சுதர்சன் ஆகிய இருவரும் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மதியழகன் மருத்துவம் பார்த்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி மருத்துவர் மதியழகனை பாபநாசம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×