என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிவகங்கை அருகே வாலிபரை மிரட்டி பணம்- செல்போன் பறித்தவர் கைது
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா நாலுகோட்டை கிரா மத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 25). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 25 வயது மதிக்கத்தக்க நபர், கத்தியை காட்டி மிரட்டி வீரபாண்டியிடம் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்து அவர் சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீரபாண்டியிடம் பணம் பறித்தது நாலுகோட்டையைச் சேர்ந்த முருகன் என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பணம்-செல்போனை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகள் நகை பறிப்பு வழிப்பறி போன்ற சம்பவங்களில் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர்.
எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்