என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்திற்கு ஆதரவு- மணல் லாரிகள் 5-ந்தேதி ஓடாது
Byமாலை மலர்3 April 2018 1:44 PM GMT (Updated: 3 April 2018 1:44 PM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ந்தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக மணல் லாரி உரிமையாளர்கள் தலைவர் கூறியுள்ளார்.
நாமக்கல்:
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ந்தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆதரவு தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதனால் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுணக்கம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். வாரியம் அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும் தொடர்ந்து மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5-ந்தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆதரவு தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதனால் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுணக்கம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம். வாரியம் அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும் தொடர்ந்து மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X