என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு செல்கிறார் சசிகலா - தஞ்சையில் இருந்து இன்று புறப்பட்டார்
Byமாலை மலர்31 March 2018 3:41 AM GMT (Updated: 31 March 2018 3:41 AM GMT)
கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்த சசிகலா, பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே இன்று தஞ்சாவூரில் இருந்து சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். #Sasikala #Parole #BangaloreJail
தஞ்சாவூர்:
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். தஞ்சை வந்த அவர் கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். அவரை உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சசிகலாவின் பரோல் காலம் ஏப்ரல் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், சசிகலா முன்கூட்டியே சிறைக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி, தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.50 மணியளவில் சசிகலா, கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார். #Sasikala #Parole #BangaloreJail
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 15 நாட்கள் பரோலில் வந்தார். தஞ்சை வந்த அவர் கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். பின்னர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். அவரை உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
சசிகலாவின் பரோல் காலம் ஏப்ரல் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், சசிகலா முன்கூட்டியே சிறைக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி, தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 8.50 மணியளவில் சசிகலா, கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார். #Sasikala #Parole #BangaloreJail
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X