search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆலோசனை
    X

    கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து பெரம்பலூரில் அ.தி.மு.க.வினர் ஆலோசனை

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கூட்டுறவு சங்கத் தேர்தலையொட்டி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கூட்டுறவு சங்கத் தேர்தலையொட்டி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் என்.ஆர் சிவபதி பேசும் போது, கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளைக் கலந்தாலோசித்து, எவ்வித பாரபட்சமின்றி தேர்வு செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து, வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் என்.கே.கர்ணன், ப.கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்டச் செயலாளர் எம்.என்.ராஜாராம், நகரச்செயலாளர் ஆர்.ராஜபூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×