என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூரில் ரோட்டை கடக்க முயன்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்27 March 2018 11:05 AM GMT (Updated: 27 March 2018 11:05 AM GMT)
சூலூரில் ரோட்டை கடக்க முயன்ற ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் சந்தான லட்சுமி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி கோமளவல்லி (52). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைப்பார்த்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளி முடிந்து இவர் பஸ்சில் வீடு திரும்பினார். மாலை 6 மணியளவில் பாப்பம் பட்டி பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென ஆசிரியை கோமளவல்லி கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை பறித்து கொண்டு சென்றனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி அவர்களை பின்தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டே விரட்டி சென்றார். அப்போது அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X