search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் தண்ணீர் பந்தல் திறப்பு
    X

    அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

    பெரம்பலூரில் நகர அ.தி.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாலக்கரை எம்ஜிஆர் சிலை அருகில் நகர அ.தி.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராஜபூபதி தலைமை வகித்தார். எம்.பி. மருதராஜா, எம்.எல்.ஏ .தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், நீர் போன்றவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராணி, ராஜாராம், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி, நகர நிர்வாகிகள் முகமது இக்பால், சிவக்குமார், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×