search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் பந்தல் திறப்பு"

    • வண்ணாங்குளம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் உள்ள வண்ணாங்குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை நேற்று ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், பொதுமக்கள் வசதிக்காக திறந்து வைத்தார்.

    மாவட்ட செயலாளர் தூசி மோகன் முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கொளத்தூர் திருமால் வரவேற்று பேசினார்.

    மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஜாகிர் உசேன், ஆரணி நகர கழக செயலாளர் அசோக் குமார், ஒன்றிய செயலாளர் வக்கீல் சங்கர், ஆரணி நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு, கண்ணமங்கலம் நகர கழக செயலாளர் பாண்டியன், அரையாளம் வேலு, மாவட்ட ஐடி விங் செயலாளர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சரவண பாபு, மாவட்ட கலைப்பிரிவு பொருளாளர் குமார், மேல்நகர் ஊராட்சி மன்ற தலைவர் ரத்னா அன்பழகன், ஒன்றிய விவசாய பிரிவு சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வண்ணாங்குளம் கருணாகரன் நன்றி கூறினார்.

    • கொடியேற்று விழா மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • நீர் மோர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் சார்பில் பேருந்து நிறுத்தத்தில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி அ.தி.மு.க கொடியேற்று விழா மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் கொடியினை ஏற்றி நீர் மோர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர், மேற்கு ஒன்றிய செயலாளர், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    • அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூர் கழக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் டாக்டர் பன்னீர் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர் சேட்டு, விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைத் தலைவர் டாக்டர் பாலு, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், நகர நிர்வாகிகள் காந்தி, ராஜா,தீப்பொறி மாதையன், சுழல் கண்ணன், ராஜேஷ் ,ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×