search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிக்க வற்புறுத்தி பிளஸ்-1 மாணவிக்கு மிரட்டல் - கார் டிரைவர் கைது
    X

    காதலிக்க வற்புறுத்தி பிளஸ்-1 மாணவிக்கு மிரட்டல் - கார் டிரைவர் கைது

    சிவகங்கையில் காதலிக்க வற்புறுத்தி மாணவிக்கு மிரட்டல் விடுத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா வீளனேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் கமலி (வயது 16). இவர் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (23), கார் டிரைவராக உள்ளார். கமலி பள்ளிக்குச் செல்லும் போது கண்ணன் அவரை பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

    கமலி அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ‘என்னிடம் உள்ள செல்போனில் நாம் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படம் உள்ளது. நீ என்னை காதலிக்க மறுத்தால் அதனை பேஸ்புக் மற்றும் ஊடகங்களில் வெளியிடுவேன்’ என்று மிரட்டினார்.

    நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கமலி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் (பொ) வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கண்ணனை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. #tamilnews

    Next Story
    ×