என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்- ராமதாஸ்
Byமாலை மலர்22 March 2018 1:47 AM GMT (Updated: 22 March 2018 1:47 AM GMT)
கர்நாடக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை இம்மாத இறுதிக்குள் அமைக்க முடியாது என்று நீர்வளத்துறை செயலாளர் கூறியிருப்பதில் புதிதாக எதுவும் இல்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு மேலாண்மை வாரியமாகவும் இருக்கலாம் அல்லது வேறு அமைப்பாகவும் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அடுத்தக்கட்டமாக தேர்தல் ஆணையத்தின் மூலமாக முட்டுக்கட்டை தயாராகி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை வரும் 24 அல்லது 25-ந் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு அடுத்த சில நாட்களில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டால் அதைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு அடுத்த சில மாதங்களுக்கு கிடப்பில் போட்டு விடும்.
2013-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் அதைக் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை அப்போதைய காங்கிரஸ் அரசு செய்தது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்ததாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
ஆனால், கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்படும் வரை காத்திருந்த மத்திய அரசு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடக மாநில தேர்தல் நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா? என்று கேட்டு 16.4.2013 அன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இதற்கு 29.4.2013 அன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம், ‘கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை, அதாவது 5.5.2013 வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டாம்’ என்று உத்தரவிட்டது. அன்று கைவிடப்பட்ட காவிரி வாரியம் இன்றுவரை அமைக்கப்படவே இல்லை.
இப்போதும் அதே உத்தியைக் கடைபிடிக்க மத்திய அரசு முயலுகிறது. இந்த தந்திரத்தை தமிழக அரசு உணர்ந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாறாக 29-ந் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதுவரை காத்திருப்போம் என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறினால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்காக தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் நிரந்தரமாக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அறிவிப்பு வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை இம்மாத இறுதிக்குள் அமைக்க முடியாது என்று நீர்வளத்துறை செயலாளர் கூறியிருப்பதில் புதிதாக எதுவும் இல்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் அமைப்பு மேலாண்மை வாரியமாகவும் இருக்கலாம் அல்லது வேறு அமைப்பாகவும் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அடுத்தக்கட்டமாக தேர்தல் ஆணையத்தின் மூலமாக முட்டுக்கட்டை தயாராகி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை வரும் 24 அல்லது 25-ந் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவ்வாறு அடுத்த சில நாட்களில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டால் அதைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு அடுத்த சில மாதங்களுக்கு கிடப்பில் போட்டு விடும்.
2013-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போதும் அதைக் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளை அப்போதைய காங்கிரஸ் அரசு செய்தது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்ததாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
ஆனால், கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்படும் வரை காத்திருந்த மத்திய அரசு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடக மாநில தேர்தல் நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாமா? என்று கேட்டு 16.4.2013 அன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இதற்கு 29.4.2013 அன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம், ‘கர்நாடக மாநில தேர்தல் முடியும் வரை, அதாவது 5.5.2013 வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டாம்’ என்று உத்தரவிட்டது. அன்று கைவிடப்பட்ட காவிரி வாரியம் இன்றுவரை அமைக்கப்படவே இல்லை.
இப்போதும் அதே உத்தியைக் கடைபிடிக்க மத்திய அரசு முயலுகிறது. இந்த தந்திரத்தை தமிழக அரசு உணர்ந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாறாக 29-ந் தேதி வரை அவகாசம் இருக்கிறது. அதுவரை காத்திருப்போம் என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறினால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்காக தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் நிரந்தரமாக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அறிவிப்பு வெளியிடப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X