search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.மண்டல மாநாட்டு நிகழ்ச்சி விவரம்
    X

    தி.மு.க.மண்டல மாநாட்டு நிகழ்ச்சி விவரம்

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2 நாட்கள் நடக்கும் தி.மு.க.மண்டல மாநாட்டு நிகழ்ச்சி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை நெடுஞ்சாலையோரம் சரளை பகுதியில் தி.மு.க.மண்டல மாநாடு பிரமாண்டமாக நடக்க உள்ளது.

    வரும் 24-ந்தேதி, 25-ந்தேதி என 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க.வினர் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. பிரம்மாண்ட மேடை, பந்தல் என அமைக்கப்பட்டு அப்பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது.

    2 நாட்கள் நடக்கும் மாநாட்டு நிகழ்ச்சிகள் முழு விவரம் வருமாறு.-

    24-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கிறது. அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் நாதஸ்வரம் தவிலிசை நடக்கிறது.

    காலை 10 மணிக்கு கோவி.செழியன் எம்.எல்.ஏ.மாநாட்டு கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார். 10.30 மணிக்கு வரவேற்பு குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி வரவேற்று பேசுகிறார். தொடர்ந்து மாநாட்டு செயலாளர்கள் என்.நல்லசிவம், முபாரக், சிவலிங்கம், வீரபாண்டி, ஆ.ராஜா, ராஜேந்திரன் செல்வராஜ், சி.ஆர்.ராமசந்திரன், தமிழ்மணி, மு.முத்துசாமி, கார்த்திக் ஆகியோர் மாநாட்டு தலைவரை வழிமொழிந்து பேசுகிறார்கள்.

    பிற்பகல் 11.15 மணிக்கு மாநாட்டு தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநாட்டு திறப்பாளர் திருச்சி சிவா எம்.பி.ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று இரவு 9 மணிக்கு முன்னாள் அமைச்சரும், முதன்மை செயலாளருமான துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். அத்துடன் மாநாட்டு முதல் நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

    மறுநாள் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. கட்சி முன்னோடிகள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

    மதியம் 12.30 மணியளவில் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றுகிறார். மாலை 3 மணிக்கு நாகூர் ஹனிபா நவுசாத்அலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு படிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணியிலிருந்து பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகிறார்கள்.

    இரவு 8 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் எழுச்சியுரை ஆற்றுகிறார். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் நிறைவு பேரூரையாற்றுகிறார்.  #Tamilnews

    Next Story
    ×