search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் பலாத்காரம் - டிரைவருக்கு வலைவீச்சு
    X

    பிளஸ்-2 மாணவியிடம் பாலியல் பலாத்காரம் - டிரைவருக்கு வலைவீச்சு

    வில்லியனூர் அருகே பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 21). லாரி டிரைவர். இவருக்கு புதுவையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    அந்த மாணவியிடம் தனது வீட்டை காட்டுகிறேன் என்று கூறி, ஆரியபாளையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுபற்றி அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார். அவர் வில்லியனூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான அந்த மாணவிக்கு 18 வயது நிரம்பவில்லை. எனவே குழந்தைகள் கற்பழிப்பு என்ற சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெகன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×