search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
    X

    அரியலூர் சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

    அரியலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் நகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் அருகே ஒரே வளாகத்திற்குள் வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், தீயணைப்புத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.

    இதே வளாக்ததிற்குள் சிறுவர் சீர்திருத்த பள்ளியான கிளைச்சிறைச்சாலையும் உள்ளது. இந்த சிறையில் 18 முதல் 21 வயது வரையிலான கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்.

    20 பேர் வரை அடைக்கப்படும் இந்த சிறையில் நேற்றைய தினம் 3 பேர் மட்டும் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியான் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் மணிகண்டன் (வயது 19) என்பவர் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த 18-ந்தேதி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைதான மணிகண்டன் நேற்று மாலை உணவு உண்பதற்காக அறையில் இருந்து திறந்துவிடப்பட்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று காம்பவுண்டு சுவரின் மீது ஏறிய மணிகண்டன் அங்கிருந்து கீழே குதித்து தப்பிச்சென்றார்.

    உடனடியாக பணியில் இருந்த சூப்பிரண்டு மற்றும் 3 போலீசார் பல்வேறு இடங் ளில் தேடினர். ஆனால் தப்பிய மணிகண்டன் சிக்கவில்லை. இதுகுறித்து சூப்பிரண்டு பாலு அரியலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் இருந்து தப்பிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×