என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்திரயான்-2 ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்
Byமாலை மலர்12 March 2018 2:16 AM GMT (Updated: 12 March 2018 2:16 AM GMT)
நிலாவை பற்றி ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில், இஸ்ரோ தலைவர் சிவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்களுக்காக, அவர்கள் கடலில் இருக்கும்போது பாதுகாப்பாக இருக்க ஒரு கருவியை தயாரித்து உள்ளோம். செல்போன் ‘செயலி’யாக(ஆப்) அதை தயாரித்து உள்ளோம். மீனவர்கள் கடலில் செல்லும்போது, எந்த திசையில் சென்றால் அதிக மீன்கள் கிடைக்கும். கடலின் தன்மை எப்படி இருக்கிறது?, பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த ‘செயலி’ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இது தயாரிக்கும் நிலையில் உள்ளது. இந்த கருவி தயாரிக்கும் பணி முடிந்ததும் மீனவர்களுக்கு வழங்கப்படும். முதல்கட்டமாக தமிழக, கேரள மீனவர்களுக்கு இந்த கருவிகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு இந்த கருவியை இந்தியாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
நிலாவை பற்றி ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதம் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். அது முடியாவிட்டால் அக்டோபர் மாதம் அனுப்பப்படும். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த மாத இறுதியில் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதை அனுப்பியதும் உடனடியாக ஐ.ஆர்.என்.என்.எஸ். என்ற செயற்கைகோள் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி அதிவிரைவு தகவல் தொடர்புக்கான ஜி.சார்ட்-11 என்ற முக்கிய செயற்கைகோளை விரைவில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
சென்னை விமான நிலையத்தில், இஸ்ரோ தலைவர் சிவன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்களுக்காக, அவர்கள் கடலில் இருக்கும்போது பாதுகாப்பாக இருக்க ஒரு கருவியை தயாரித்து உள்ளோம். செல்போன் ‘செயலி’யாக(ஆப்) அதை தயாரித்து உள்ளோம். மீனவர்கள் கடலில் செல்லும்போது, எந்த திசையில் சென்றால் அதிக மீன்கள் கிடைக்கும். கடலின் தன்மை எப்படி இருக்கிறது?, பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த ‘செயலி’ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இது தயாரிக்கும் நிலையில் உள்ளது. இந்த கருவி தயாரிக்கும் பணி முடிந்ததும் மீனவர்களுக்கு வழங்கப்படும். முதல்கட்டமாக தமிழக, கேரள மீனவர்களுக்கு இந்த கருவிகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பிறகு இந்த கருவியை இந்தியாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வழங்க அரசு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
நிலாவை பற்றி ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதம் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். அது முடியாவிட்டால் அக்டோபர் மாதம் அனுப்பப்படும். தகவல் தொழில்நுட்பத்துக்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்த மாத இறுதியில் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதை அனுப்பியதும் உடனடியாக ஐ.ஆர்.என்.என்.எஸ். என்ற செயற்கைகோள் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி அதிவிரைவு தகவல் தொடர்புக்கான ஜி.சார்ட்-11 என்ற முக்கிய செயற்கைகோளை விரைவில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X