search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூர் அருகே கொள்ளையடிக்க வங்கியை நோட்டமிட்டவன் கைது
    X

    பாகூர் அருகே கொள்ளையடிக்க வங்கியை நோட்டமிட்டவன் கைது

    பாகூர் அருகே வங்கியில் கொள்ளையடிக்க நோட்டமிட்டவன் கைது செய்யப்பட்டான்.

    பாகூர்:

    பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நேற்று இரவு குருவிநத்தம் பகுதியில் ரோந்து பணி சென்றனர். அங்குள்ள வாழப்பட்டு வங்கி அருகே ரோந்து சென்ற போது இருளில் மறைந்திருந்த ஒருவன் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவன் கடலூர் மாவட்டம் வசுந்தராயன் பாளையம் சலங்கை நகரை சேர்ந்த அருள் (31) என்பதும், இவன் மீது தமிழக பகுதியில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும், வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அருளை போலீசார் கைது செய்தனர். #tamilnews

    Next Story
    ×