என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் வீடு பிரச்சினையில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்19 Feb 2018 3:52 PM GMT (Updated: 19 Feb 2018 3:52 PM GMT)
திருச்சியில் உறவினருடன் ஏற்பட்ட வீடு பிரச்சினையில் கட்டிட தொழிலாளி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மலைக்கோட்டை:
திருச்சி மலைக்கோட்டை ஜீவாநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் அங்குள்ள நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த வீடு தொடர்பாக அவருக்கும், அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து இரு தரப்பினரும் மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உறவினருக்கு சாதகமாக முடிந்தது. இதனால் மனவேதனையடைந்த பிரகாஷ், இன்று அதிகாலை திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து பிரகாஷின் மனைவி நிலா தேவி மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த பிரகாஷூக்கு 2குழந்தைகள் உள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X