search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் வீடு பிரச்சினையில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    திருச்சியில் வீடு பிரச்சினையில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    திருச்சியில் உறவினருடன் ஏற்பட்ட வீடு பிரச்சினையில் கட்டிட தொழிலாளி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மலைக்கோட்டை:

    திருச்சி மலைக்கோட்டை ஜீவாநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் அங்குள்ள நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த வீடு தொடர்பாக அவருக்கும், அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து இரு தரப்பினரும் மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உறவினருக்கு சாதகமாக முடிந்தது. இதனால் மனவேதனையடைந்த பிரகாஷ், இன்று அதிகாலை திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  

    இது குறித்து பிரகாஷின் மனைவி நிலா தேவி மலைக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த பிரகாஷூக்கு 2குழந்தைகள் உள்ளனர். #tamilnews
    Next Story
    ×