search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது
    X

    ராஜபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது

    ராஜபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரும் மது பாட்டில்கள் பதுக்கிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாஸ், உதவி ஆய்வாளர் விஜி மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் சோதனை செய்தனர்.

    அங்குள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்ற சீதக்காதி தெருவைச் சேர்ந்த காஜாமைதீன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். அந்த கடையில் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதே போன்று வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் புல்லுக்கடை தெருவில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட 55 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை விற்ற பெட்டிக்கடைக்காரரான பூபால்பட்டி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) கைது செய்யப்பட்டார்.

    சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா மற்றும் போலீசார் சொக்கநாதன்புத்தூரில் ரோந்து சென்றனர். வடகாசியம்மன் கோவில் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற சக்தி ஈஸ்வரன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் மற்றும் போலீசார் புத்தூர் ரோடு மரப்பேட்டை அருகே ரோந்து சென்றபோது, திருட்டுத்தனமாக மதுபாட் டில்கள் பதுக்கிய சேத்தூர் ராஜா (65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 குவார்ட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×