என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இருநாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
Byமாலை மலர்23 Dec 2017 11:53 AM GMT (Updated: 23 Dec 2017 11:53 AM GMT)
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று முதன்முறை தமிழகம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சென்னை விமான நிலையத்தில் முப்படையினர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து இன்று காலை தமிழகம் வந்தார். தனிவிமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்றார். ராமநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்து மதுரை திரும்பி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இன்று முதன்முறையாக தமிழகம் வந்த ராம்நாத் கோவிந்துக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து முப்படையினர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் மந்திரி ஓ.பன்னீர் செல்வம், பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால், முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஜனாதிபதிக்கு மலர் செண்டுகளை அளித்தும், சால்வைகளை அணிவித்தும் அன்புடன் வரவேற்றனர்.
அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி சற்றுநேர ஓய்வுக்கு பின்னர் இந்திய பொறியாளர்கள் சங்க பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி இருக்கும் அவர் நாளை காலை ஐதராபாத் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து இன்று காலை தமிழகம் வந்தார். தனிவிமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்றார். ராமநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்து மதுரை திரும்பி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இன்று முதன்முறையாக தமிழகம் வந்த ராம்நாத் கோவிந்துக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து முப்படையினர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் மந்திரி ஓ.பன்னீர் செல்வம், பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால், முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஜனாதிபதிக்கு மலர் செண்டுகளை அளித்தும், சால்வைகளை அணிவித்தும் அன்புடன் வரவேற்றனர்.
அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி சற்றுநேர ஓய்வுக்கு பின்னர் இந்திய பொறியாளர்கள் சங்க பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி இருக்கும் அவர் நாளை காலை ஐதராபாத் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X