search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மாயம்
    X

    புதுவையில் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மாயம்

    புதுவையில் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கடலூர் சுத்துகுளம் ரெயில்வேகேட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் இந்துமதி (வயது22). இவர் முதலியார்பேட்டை தியாகு முதலியார்நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று தான் தங்கி இருந்த உறவினர் வீட்டில் இருந்து வெளியே சென்ற இந்துமதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் இந்துமதி இல்லை.

    இதையடுத்து இந்துமதியின் தந்தை லட்சுமணன் தனது மகள் மாயமானது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இந்துமதியை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×