என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
54 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்
Byமாலை மலர்23 Oct 2017 12:46 PM GMT (Updated: 23 Oct 2017 12:46 PM GMT)
வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியை நெருங்கி வருகிறது.
கூடலூர்:
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 127 அடியாக இருந்தது.
அதன்பின்பு வைகை அணையில் நீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 121.70 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 241 கன அடி நீர் வந்துகெண்டிருக்கிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.38 அடியாக உள்ளது. 57 அடியை எட்டினால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இருந்தபோதும் தண்ணீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. 146 கன அடி நீரே வருகிறது. 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.35 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மழை எங்கும் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 127 அடியாக இருந்தது.
அதன்பின்பு வைகை அணையில் நீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 121.70 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 241 கன அடி நீர் வந்துகெண்டிருக்கிறது. அணையில் இருந்து 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.38 அடியாக உள்ளது. 57 அடியை எட்டினால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இருந்தபோதும் தண்ணீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. 146 கன அடி நீரே வருகிறது. 60 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.35 அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மழை எங்கும் இல்லை. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X