என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் பேராசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்21 Oct 2017 10:24 AM GMT (Updated: 21 Oct 2017 10:24 AM GMT)
திருச்சியில் பேராசிரியை வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் பத்திரிநாத், இவர் சேலம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சொருபராணி (வயது 45), திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதற்காக சொருபராணி திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் கடவுள் பூங்கா பகுதியில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் கிருஷ்ணகிரியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார்.
விடுமுறை முடிந்து இன்று அதிகாலை திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தது.
மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து சொருபராணி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் பத்திரிநாத், இவர் சேலம் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சொருபராணி (வயது 45), திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதற்காக சொருபராணி திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் கடவுள் பூங்கா பகுதியில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் கிருஷ்ணகிரியில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார்.
விடுமுறை முடிந்து இன்று அதிகாலை திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தது.
மேலும், பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து சொருபராணி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X