search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    கடலூரில் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

    கடலூரில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் பச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி (வயது 47). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுமதி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக சுமதி இறந்தார்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுமதிக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததும், மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
    Next Story
    ×