என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் கடத்தி வந்த ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்
Byமாலை மலர்14 Aug 2017 4:16 PM GMT (Updated: 14 Aug 2017 4:16 PM GMT)
கர்நாடகத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்தி வந்த ஒரு டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தென் மாவட்டங்களுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன், போலீசார் ரவிச்சந்திரன், குழந்தைவேலு, உதயகுமார் ஆகியோர் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகிய புகையிலை பொருட்கள் சுமார் ஒரு டன் அளவிற்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒரு டன் புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தியதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த முனீஸ்வரன், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கர்நாடகாவில் இருந்து மயிலாடுதுறைக்கு அந்த புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தென் மாவட்டங்களுக்கு, தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன், போலீசார் ரவிச்சந்திரன், குழந்தைவேலு, உதயகுமார் ஆகியோர் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் ஆகிய புகையிலை பொருட்கள் சுமார் ஒரு டன் அளவிற்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஒரு டன் புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தியதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த முனீஸ்வரன், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கர்நாடகாவில் இருந்து மயிலாடுதுறைக்கு அந்த புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X