என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மயிலாடுதுறையில் தலித் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை எஸ்.சி. பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை தமிழக ஒருங்கிணைப்பாளர் தே.எர்னஸ்ட் நெல்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
டி.இ.எல்.சி. போதகர்கள் மற்றும் வி.சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் பா.ரவிச் சந்திரன், எஸ்.சி.எஸ்.டி. பணிக்குழு தஞ்சை மறை மாவட்ட செயலாளர் அருட்தந்தை அமல்தாஸ் ஜான் ஜே.செல்லதுரை, பாஸ்டர் ஜோஸ்வாபாரத், வி.சிறுத்தைகள் கட்சி கடலங்குடி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சி.மோகன் குமார், சாம்மோசஸ், எம்.மைக்கேல், ஒய்.ஜெயசீலன் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள், தலித் முஸ்லிம்களை எஸ்.சி. பட்டியலில் சேர்த்திடு, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். அதேபோல் சிறுபான்மையினர் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.எஸ்.ஐ. ரெவரன்ட், பிரபாகரன், சிங்காரவேலு, சமூக நீதிபேரவை கே.பால்ரத்தினம், தோழர் மணி, சோ.சேகர் என்.சி.சி.ஐ. யூ.ஆர்.எம். அமைப்பை சேர்ந்தவர்கள் வி.சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டன உரையாற்றினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்