search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலித் கிறிஸ்தவர்கள்"

    • தஞ்சாவூர் எஸ்.சி/ எஸ்.டி பணிக்குழு மறை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சையில் எஸ்.சி / எஸ்.டி பணிக்குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சண்.ராமநாதன் பேசினார்.

    தஞ்சாவூர்:

    தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே அமல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

    நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்த வர்கள் -இஸ்லாமியர்கள் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தஞ்சாவூர் எஸ்.சி/ எஸ்.டி பணிக்குழு மறை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் பேரருட்திரு சகாய ராஜ் தலைமை தாங்கினார் . மறை மாவட்ட அதிபர் பிரபாகரன், மறை மாவட்டத் துணைத் தலைவர் ஜான் ஜோசப் சுந்தரம், மறை மாவட்ட வேந்தர் ஜான் சக்கரியாஸ், எஸ்.சி/எஸ்.டி/பி.சி பணிக்குழு செயலர் விக்டர் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பா ளராக தி.மு.க மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன் கலந்து கொண்டார்.ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் விடுதலை சிறுத்தை கட்சி சொக்கா ரவி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரான்சிஸ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் செந்தி ல்குமார், இ.சி.ஐ. திருச்சபை சூசைப்பால், அருட்திரு சாமி, அருளானந்த், பணிக்குழு ஒருங்கிணை ப்பாளர் அகஸ்டின் ராஜ் உள்பட ஏராளமான கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    ×