என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வண்ணாரப்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.33 லட்சம் கையாடல்
ராயபுரம்:
டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் விற்பனையாகும் மது பானங்களின் பணம் கடையில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
மறுநாள் வசூலிப்பாளர்கள் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று பணத்தை வசூலிப்பார்கள்.
சனி, ஞாயிறு வங்கி விடுமுறையாக இருந்தால் திங்கட்கிழமைதான் கடை மேற்பார்வையாளரிடம் இருந்து கணக்கு பெறப்படும்.
இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை பணம் முழுமையாக செலுத்தப்படவில்லை என கணக்குகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்தது. விற்பனை பணத்தை முழுமையாக செலுத்தாமல் மோசடி செய்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
33 லட்சத்து 60 ஆயிரத்து 116 ரூபாய் கடை ஊழியர்கள் கையாடல் செய்திருப்பது தெரிய வந்ததையடுத்து சென்னை வடக்கு மண்டல மேலாளர் பியோதங்கதுரை வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதில் டாஸ்மாக் விற்பனை பணத்தை மேற் பார்வையாளர் உள்பட ஊழியர்கள் 4 பேர் ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் கையாடல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த கடையின் மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி (46), விற்பனையாளர்கள் நாகராஜ், சுந்தரம், உதவியாளர் ராமு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்