என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தளி அருகே விபத்து: சரக்கு வேன் கவிழ்ந்து 2 விவசாயிகள் பலி
Byமாலை மலர்23 May 2017 6:10 PM GMT (Updated: 23 May 2017 6:10 PM GMT)
தளி அருகே பின்பக்க டயர் வெடித்ததால், காய்கறி பாரம் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னாரெட்டி (வயது 48). கோபசந்திரத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி (60). ஆருப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (20). விவசாயிகளான இவர்கள் 3 பேரும், தாசரப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு, நேற்று ஒரு சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிச் சென்றனர்.
காய்கறி பாரம் மீது அவர்கள் 3 பேரும் அமர்ந்திருந்தனர். தளி அடுத்த கும்ளாபுரம் அருகே சரக்கு வேன் சென்று கொண்டிருந்த போது, பின் பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் காய்கறி பாரம் மீது அமர்ந்திருந்த சென்னாரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நாராயணரெட்டி, ராஜேஷ் ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் நாராயணரெட்டி இறந்தார். ராஜேசுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த தாசரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னாரெட்டி (வயது 48). கோபசந்திரத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி (60). ஆருப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ் (20). விவசாயிகளான இவர்கள் 3 பேரும், தாசரப்பள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு, நேற்று ஒரு சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிச் சென்றனர்.
காய்கறி பாரம் மீது அவர்கள் 3 பேரும் அமர்ந்திருந்தனர். தளி அடுத்த கும்ளாபுரம் அருகே சரக்கு வேன் சென்று கொண்டிருந்த போது, பின் பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் காய்கறி பாரம் மீது அமர்ந்திருந்த சென்னாரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நாராயணரெட்டி, ராஜேஷ் ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் நாராயணரெட்டி இறந்தார். ராஜேசுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X