என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா?: ஓ.பன்னீர் செல்வம் இன்று முடிவு
Byமாலை மலர்29 April 2017 9:50 AM GMT (Updated: 29 April 2017 9:50 AM GMT)
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்திவருகிறார். மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார்.
பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணியினர் நிபந்தனையில்லாமல் பேச்சு நடத்த தயார் என்று அறிவித்தனர். பேச்சு சுமூகமாக நடைபெற டி.டி.வி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தனர். தலைமை கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், கட்சி, ஆட்சியில் பதவி உள்பட பல்வேறு ரகசிய நிபந்தனைகளும் விதித்துள்ளனர்.
ஆனால் நிபந்தனைகள் தொடர்பாக இரு அணியிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. நிபந்தனைகள் தொடர்பாக இரு அணியினரும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியும் வருகிறார்கள். இதனால் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணையக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும், தொண்டர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய கருத்து எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இணைய கூடாது தனித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
எனவே இது பற்றி முடிவு எடுப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வீனஸ் காலனியில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதில் நத்தம் விசுவநாதன், மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், மைத்ரேயன், செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்பது குறித்தும் தொண்டர்கள் கருத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார்.
ஆலோசனையில் கலந்து கொண்ட பின் மைத்ரேயன் எம்.பி. கூறுகையில், “அ.தி.மு.க. அம்மா அணியினர் பேச்சு வார்த்தை என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்கள். நிபந்தனை பற்றி உறுதி அளிக்க மறுக்கிறார்கள்” என்றார்.
பொன்னையன் கூறுகையில், இரு அணிகளும் இணையகூடிய சுமூகமான நிலை உருவாகி உள்ளதாகவும், சுமூகமான நிலையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார்.
பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அணியினர் நிபந்தனையில்லாமல் பேச்சு நடத்த தயார் என்று அறிவித்தனர். பேச்சு சுமூகமாக நடைபெற டி.டி.வி. தினகரனை கட்சியை விட்டு நீக்கி வைத்தனர். தலைமை கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும், கட்சி, ஆட்சியில் பதவி உள்பட பல்வேறு ரகசிய நிபந்தனைகளும் விதித்துள்ளனர்.
ஆனால் நிபந்தனைகள் தொடர்பாக இரு அணியிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. நிபந்தனைகள் தொடர்பாக இரு அணியினரும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியும் வருகிறார்கள். இதனால் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் மங்கி வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணையக் கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும், தொண்டர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய கருத்து எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இணைய கூடாது தனித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
எனவே இது பற்றி முடிவு எடுப்பதற்காக ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வீனஸ் காலனியில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது.
இதில் நத்தம் விசுவநாதன், மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், மைத்ரேயன், செம்மலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்பது குறித்தும் தொண்டர்கள் கருத்து குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார்.
ஆலோசனையில் கலந்து கொண்ட பின் மைத்ரேயன் எம்.பி. கூறுகையில், “அ.தி.மு.க. அம்மா அணியினர் பேச்சு வார்த்தை என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்கள். நிபந்தனை பற்றி உறுதி அளிக்க மறுக்கிறார்கள்” என்றார்.
பொன்னையன் கூறுகையில், இரு அணிகளும் இணையகூடிய சுமூகமான நிலை உருவாகி உள்ளதாகவும், சுமூகமான நிலையில் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X